×

பேட்டை பள்ளியில் மகளிர் தினவிழா

பேட்டை, மார்ச் 26: பேட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினவிழா நடந்தது. நிகழச்சியில் வரலாற்று ஆசிரியை விஜயலலிதா வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கதாய் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் பங்கேற்று பெண் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு வழங்கிடும் சலுகைகள் குறித்து விளக்கினார். மகளிர் பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சேரன்மகாதேவி ருக்குமணி மகளிர் சமூகநல அறக்கட்டளை தலைவி கோமதி ரொக்க பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அபுபக்கர் மற்றும் மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Women's Day ,Pattai School ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்